Back
Poem
August 10, 2017
கவிதை
SHARE

யாரவள்? எதற்காய் இத்தனை நேசம்? சுகம் கெட்டு போன பின்னும் அகம் மலர அன்பு செய்கிறாளே யாரவள்? முகம் கூட பார்த்ததில்லை. முன் ஜென்ம பந்தம் தான் முடியாமல் தொடர்கிறதோ? எதனால்
பொட்டாசியம் அயோடைடை போல் நேசத்தை அள்ளி வீசி நெஞ்சு பொழியச் செய்கிறாள்..? எதனால் அவள் பேச்சு எத்தனாலாய் போதை ஏற்றுகிறது? எதனால் அவள் அன்பில் இரும்பாய் இருந்த நான் அறை
வெப்பநிலையில் உருகும் காலியமானேன்? எதனால் அவள் கண் கசிந்தால் கற்பூரமாய் என் கோபம் காற்றில் பதங்கமாகிறது? எதனால் எதனால் இந்த மாற்றங்கள் எதனால்?
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...