Back

Poem

August 10, 2017

கவிதை

SHARE

கவிதை

சிறுமை கண்டு பொங்குவாய்..! சினந்தெழுந்து ஓர்ச்சிறு பொழுதுந் தவறாமல் மனஞ்சொல்லும் மார்க்கம் தவிர்த்து எண்ணத்தில் சிறுமை கொண்டு யாவர்க்கும் தீதுசெய் கயவரை பொறுக்காதே!
கடிந்துபேசு! படியாது போனால் அடிக்கவுந் தயங்காதே! அன்பே சிவம் எல்லாம் நடிப்புக்கு மட்டுந்தான் நண்பனே! நம்நாட்டில் படிப்புக்கு மதிப்பில்லை பணத்திற் குண்டு வெடித்தெழுந்து
வா!வேலைகள் நிறையச் சொல்வேன். கண்ணான பெண்கள் மேல்தினம் காமக் கண்வீசும் உடல்மோகங் கொண்ட லையும் சதைப் பசிமிகு சாத்தன்கள் பொறுக்காதே! அதையும் இதையும் செய்வதாய் சொல்லி
பதவிக்கு போனபின் பழமையை மறந்துவிட்ட உதவாத அரசியலின் ஊழல்தனம் பொறுக்காதே! ஏரும் எருதுங் கொண்டு பாருழுது ஊருக்கு சோறிட்ட உழவர் பெருமக்கள் அரைவயிற்று சோற்றுக்கும் கையேந்தி
நிற்கும் புரைவிட்ட அவலநிலை பொறுக்காதே! வறியர்மேல் வரிவிதித்து பணத்தை வசூலித்து தத்தம் வருங்கால சந்ததி வாழவழிச் செய்யும் நரிக்குறவர் கூட்டத்தின் ராஜதந்திரம் பொறுக்காதே!
சரியான சட்டமில்லை! சரியாக யாருமில்லை, இதை தெரியாமல் யாருமில்லை! கவிதையென கதைபேசும் நானுமே சரியில்லை! சொல்லில் ஒருமை பொருள் தரும் நம்மில் ஒருமை ஒன்றுக்கும் உதவாது! ஆக
இனியேனும் நண்பா இருவருமொன்று சேர்ந்து துணிவோடு கொஞ்சம் துடிப்புங் கொண்டு சிறுமை கண்டு சிறிதேனும் பொங்குவோம் சிறு மைத்துளி சொன்னதை சிறப்புடன் செய்குவோம்!

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...