Back
Poem
July 26, 2017
கவிதை
SHARE

என்று தணியும் சுதந்திர தாகம்?
கேள்விக்குறி தான்.
அறத்தால் வேள்வி செய்து
அடைந்தாலும்
நாம் ஆனந்தம் படும்படி
சுதந்திர தாகம் தணிவதென்பது
கேள்விக்குறி தான்.
மதவாத ஆட்சி நடக்கும் நாட்டில்
மனித சுதந்திரத்தை எதிர்பார்ப்பது
மாட்டு கோமியத்தில்
முறம் துடைத்து விட்டு
மணக்கிறதா என்று
முகர்ந்து பார்ப்பது போல் தான்.
நடக்காத காரியம்.
பாலை வனத்தில்
பசு மேய புல்லா?
சிரிப்பாக இருக்கிறது
சிந்தித்து தான் கேட்டீர்களா?
என்று தணியும் சுதந்திர தாகம் என.
என்று தணியும் என்பதை
என்றும் தணியாது என்று மாற்றிக் கொள்ளுங்கள்.
மாட்டுக்காக மனிதத்தை
கொன்று விட்ட
புனிதர்கள் வாழும் இந்த பூமியில்
சுதந்திர தாகம் மட்டுமல்ல
தண்ணீர் மீதான
தாகமும் தணியப் போவதில்லை.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...