Back

Poem

July 26, 2017

கவிதை

SHARE

கவிதை

சமுதாயத்தின்
கைகளுக்கு தான் எத்தனை நீளமான
எத்தனை கூர்மையான
நறுக்கப்படாத நகங்கள்.

நிர்பாயவின் பெண்மையை
ரத்தம் வரக் கீறியது.

சாதி அரிவாள் கொண்டு
ஆதிக்க வெறி கொண்டு
இளவரசன் சங்கர் என
இன்னும் எத்தனையோ உயிர்கள்
இறக்கும் வரை கீறியது.

ஊழல் நகங்கொண்டு
ஊரான் சொத்தெல்லாம் நகக்கண்ணில் ஏறும் படி கீறியது.

இப்போதென்

நெஞ்சில் நினைவில்
எத்தனை வன்மத்தோடு
இதயத்தோல் உரியக் கீறுகிறது.

கண்ணகி இன்றிருந்தால்
அவள் கற்பையும் கீறிப் பார்க்குமோ..

போதும்

எதையும்
சரியாய் செய்யாத
யாரும்
சரியாய் இல்லாத
இந்த
சரியற்ற சமூகத்தின்

நகங்களை மட்டுமல்ல
அதன் விரல்களையும் சேர்த்தே நறுக்க வேண்டும்
நாமெல்லோரும் மீசையை முறுக்க வேண்டும்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...