Back
Poem
July 2, 2017
கவிதை
SHARE

கண்ணீர் மீது என் கண்களுக்கு தான் எத்தனை காதல்? கண்ணீரை மனதின் மாசுத்துளி என்று யார் சொன்னது? கண் பூமி சுரக்கும் கங்கை. கரிக்கும் அமுதம். கன்னம் தொட்டு வழியும் புனித
நதி. இதய இயந்திரத்தின் இரக்க துளிகள். உதய ஒளி உள்நுழைய முடியா மன வான் சிந்தும் மழை. உயிரின் ஆழத்தில் இருந்து ஊற்றும் உப்பருவி. துயரத்தின் திரவ வடிவம். உணர்ச்சியில்
கொதித்து வரும் நிறமிழந்த ரத்தம். உள்ளக் கறை கழுவும் உயர் அமிலம். என் கவிதைகளின் தொடக்க புள்ளி. என் காதலின் முற்று புள்ளி. நான் அடையப் போகும் ஆத்ம ஞானத்தின் அர்த்த துளி.
இப்போது வறண்டு வரியோடி உலர்ந்த உதடு விரும்பும் உயர் பானம். அதை பருக பருக சிறுக சிறுக துளிர்க்குதே என் ஆத்ம ஞானம்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...