Back

Poem

May 26, 2017

கவிதை

SHARE

கவிதை

தோம் தனத்தோம் தனத்தோம் தனத்தோம் தீம் தனத்தோம் தனத்தோம் தனத்தோம் ஏன் பிறந்தோம் அழுதோம் சிரித்தோம்? ஏன் இருந்தோம் இழந்தோம் இறந்தோம்? ஊன் உயிராய் இணைவோம் இணைப்போம்
இருப்போம். நம் தடைகள் உடைப்போம் உழைப்போம் உயர்வோம். ஓம்...............ம் நமனுக்கும் அஞ்சோமடா எதற்கும் கெஞ்சோமடா அநியாயம் தடுப்போமடா அதற்கெதிராய் ஆயுதம் எடுப்போமடா
வன்முறை வளர்ந்து நின்றால் அதை அஹிம்சையால் எதிர்ப்போமடா. தோழா............... ஆ பொன்னும் பணமும் பொருளும் எதற்கு? உன்னை உயிராய் நேசிக்கும் உறவுகள் இருக்கு. சாதியும் மதமும்
இனமும் எதற்கு? சந்தோஷித்து வாழத்தான் மனிதம் இருக்கு. தோம் தனத்தோம் தனத்தோம் தனத்தோம் தீம் தனத்தோம் தனத்தோம் தனத்தோம் தனத்தோம் பொன்னில் செம்பென ஒன்றாய் கலப்போம் உன்னில்
என்னில் உறுதி வளர்ப்போம். நல்லவர்க்கு தீதென்றால் துடித்து எழுவோம் நம்மில் ஒருவர்க்கு வீழ்ச்சி என்றால் நாமும் விழுவோம். நேசத்தால் பாசத்தால் நெஞ்சில் சிலிர்ப்போம் அதை
நினைத்து நினைத்து நித்தம் சிரிப்போம். ஓம்.................................. ம்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...