Back

Poem

May 3, 2017

கவிதை

SHARE

கவிதை

பன்னருங் கலைகள் செய்தே பண்ணொடும் தமிழும் செய்தே பெண்ணெனும் பேழை செய்தான் அந்த பேதைக்குள் உலகை வைத்தான் கல்லுக்குள் சிலையை போல அவள் கண்ணுக்குள் காதல் வைத்தான் புண்ணுக்கு
மருந்தெனவே அவளை புணர்வதில் சுகமும் வைத்தான் தின்ன இனிக்கும் கனிச்சதைக்குள் விதை போல கன்னி சதைக்குள் மனம் வைத்தான் நத்தையொத்த மென்னாள் அவளை மெத்தைக்கான பொருளெனவே ஆக்கி
வைத்தான் அடக்கி ஆளும் ஆண்கள் சிலராலே அவளை சீர் தூக்கி வைத்தான் அவளுக்கு தூக்கும் வைத்தான். பாவி என்ன கொடுமை அவளுக்கு பாக்கி வைத்தான். பாவம் இதை சொல்லத்தான் அவளை என்
பாட்டில் வைத்தேன்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...