Back

Poem

April 27, 2017

கவிதை

SHARE

கவிதை

கற்றுத் தேர்ந்தன எல்லாம் முற்றும் முரணென கண்டேன் உற்றார் உறவினர் எல்லாம் உதவிட பழகிட கண்டேன் மற்ற மனிதர் எல்லாம் மறைந்து ஏசக் கண்டேன் பெற்றப் பேரும் புகழும் பெரும்பொய்
யெனநானும் கண்டேன் ஏற்றமும் இறக்கமும் வாழ்வில் எப்போதும் உண்டெனக் கண்டேன் மாற்றம் நிலையெனச் சொல்லி மாறிட இகழ்வார் கண்டேன் குற்றம் செய்யா போதும் குறைப்பார் உண்டெனக்
கண்டேன் உற்றதை உனக்கு விண்டேன் உறுவது காண்பாய் என்பேன். ர. அஜீத்குமார்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...