Poem
November 17, 2016
கவிதை
SHARE

சண்டைகள் வருவது
சகஜம் தானடி
சஹியே...
அதற்கென்று ஏன்
புருஷன் எனைப் பார்த்து புடிக்காததை உண்டதைப் போல்
முகம் சுழிக்கிறாய்..??
அன்போடு அருகில் வரும் என்னை
"முன்பு போல் இல்லை நீ"யென
ஏன் நிரந்தரமாய் ஒதுக்கி வைக்கிறாய்...?
இனிப்பை கண்ட ஈ போல்
உன் சிரிப்பை சிநேகிக்கும் என்னை கண்டா
எண்ணெயில் விழுந்த கடுகாய்
பொறிகிறாய்..???
முந்தானைத் தலைப்பால்
முகம் துடைப்பவளே
ஏனடி என்னை
முன்ஜென்ம விரோதிபோல் நடத்துகிறாய்....???
பிள்ளை பிழை செய்தால்
தண்டிப்பாளா தாய்..????
ஆமாமடி
என் இனியவளே
நீ எனக்கு
இரண்டாம் தாய்..!!!!
நானே விலகினாலும்
விருப்பத்தோடு நெருங்கும் அதிநேசக்காரி நீயே
அந்நியம் போல்
விலகி நிற்கிறாயெனில்
ஏதோ மன்னிக்கமாட்டாத
பிழை செய்திருப்பதை அறிகிறேன்
ஆனால் பிழை யாதென அறியேன்.....
என் பிரியமானவளே
தவறேதாய் இருப்பினும்
தண்டித்து விடு
இப்படி பிரிவுத்தீயில்
என்னை பிணமாய் எரிக்காதே.!!!
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...