Back

Poem

September 21, 2016

கவிதை

SHARE

கவிதை

முகம் பார்த்து கொண்டதில்லை
முறையாக பேசிப் பழகவுமில்லை
ஆனாலும்
அவளுக்கு என் மீது
அத்தனை நேசம்
அடியே
அன்புடையவளே
என் அன்புக்குரியவளே
உன் நேசமெண்ணி
நெஞ்சம் கனக்கிறேன்.
நீ கேட்டது
என்னோடு வாழ்கிற சுகமல்ல
வார்த்தை சுகமே
அதையும் கொடுக்காது
உன் நேசத்தை
நெஞ்சேறி மிதித்து கொன்ற
என் மீது
உனக்கு இத்தனை
பரிவிருப்பதை பார்த்து
உள்ளுக்குள் வியக்கிறேன்.
நீ என்னை சபித்தாலும்
நான் இழைத்த தீங்கிற்கு
ஈடாகாது என்ற போதிலும்
வாழ்க நீ என்று
வாழ்த்துகிறாயே
எப்படி தோழி?
இப்படி ஒரு அன்பை
இழக்க மனமில்லை
உடன் இருக்கவும் துணிவில்லை
பயம்........ உன்னை கூடி
பின் பிரியக் கூடுமோ என்ற பயம்
அதுவே உன்னிடமிருந்து என்னை
பிரித்து வைத்தது
தவறு தான்
என் மீது நீ பிரியம் வைத்தது.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...