Back

Poem

August 10, 2016

கவிதை

SHARE

கவிதை

காலங்காத்தாள
வெள்ளாட்ட ஓட்டிக்கிட்டு
கருங்கரடு போனவன
அந்தி மசங்கனப்புறம்
ஆளக்காணலையே.
ஒன்னு ரெண்டாடு
தப்பியோடிருந்தாலும்
கவலையில்லையய்யா
எங்கண்ணு அவன தான்
கையோட கூட்டிவாங்க.
வானம் இருட்ட இருட்ட
வயித்த பெரட்டுதய்யா
வளர்த்த பாசம்.
அடே "காமராசு
ஆத்தாவ அழுறேன்டா
அப்பனே ஓடியாடா"
இனியும் உன காணாட்டி
இருதயம் வெடிக்குமடா ராசா
உயிரு பிரியுமுன்னால
நீ ஊட்டுக்கு வாடா முழுசா.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...