Back
Poem
April 24, 2016
கவிதை
SHARE

#எனக்கொரு புத்தகம் போதும்.!
ஆம்
எனக்கொரு புத்தகம் போதும்
என் வாழக்கையின் நீளத்திற்கேற்ப நிறைய பக்கங்கள் இருக்க வேண்டும்.
இல்லையேல்
அதன் பக்க எண்ணிக்கைகளுக்கேற்ப
என் வாழ்க்கை இருக்க வேண்டும்.
என் காதல் கல்யாணம்
எல்லாம் அதனோடே முடித்துக் கொள்வேன்.
எழுத்துகளின் மீது எனக்கு
அப்படியொரு பிரியம்.
அதுவே எனக்கு முதல் காதலியும் மனைவியும் கூட.
நிஜமாய் சொல்லப்போனால்
புத்தகம் படிக்கத் தூவங்கி விட்டால்
அருகில் நிகழ்வது அத்தனையும் மறந்து போகும்.
எழுத்து நடைக்கேற்ப
என் மனநிலை மாறிக்கொண்டே இருக்கும்.
அழுவேன் சிரிப்பேன்.
நான் அதிகமாய் அழுததும் சிரித்ததும்
எழுத்துகளால் தான்.
அதனால் தான் கேட்கிறேன் "எனக்கொரு புத்தம் போதும்".
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...