Back

Article

December 3, 2022

கட்டுரை

SHARE

கட்டுரை

வழியெல்லாம் வழி கேட்டு வழி கேட்டு
உன் அன்பின் அடைக்கல நிழல் தேடி வந்தவனின்
பாதைகளைச் சுருட்டி சேலையாய் கட்டி நின்று
தாகத்திற்கு நீர் பருக
நெருங்கிய நதிகளை எல்லாம்
அள்ளி வாரி கூந்தலாக்கி கொண்டையிட்டு
திசைகள் எட்டையும் தாயக் கட்டைகளாய்
உருட்டி விளையாடும் உனது காலில்
கண்ணிருண்டு கால் மடிந்து
சுருண்டு விழுந்தழுது
கண்ணீரில் பாதம் நனைக்குமென்னை
உச்சி முடி பிடித்து
உயரத்தூக்கி பிடித்து
தூசியைப் போல
துயர வெளியில் ஊதி வி்ட்டு
கனத்த மேகத் தனங்கள் குலுங்க
மகிழ்ந்து சிரிக்கிறாய் நீ
மரித்து மிதக்கிறேன் நான்.

  • பித்தன்

#மீள்

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...