Article
August 10, 2022
கட்டுரை
SHARE

"எனதன்புக்குரிய தோழ தோழி மார்களே! சக மனிதனை மதித்து நடப்பது எந்த அளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் சக உயிர்களை மதித்து வாழ்வது. என்ற போதும், மனிதன் மனிதனை மட்டும்
சுரண்டி தின்னாமல் மற்ற எல்லா உயிரினங்களின் உழைப்பையும் சுரண்டித் தின்கிறான். தேவைக்கு மீறி வதை செய்கிறான். அவற்றின் உணவு, உறைவிடம் ஆகியவற்றை பறித்து அழித்து செழித்து
வாழ பேராசையுறுகிறான். ஆக, நான் உங்களுக்கு திரும்ப திரும்ப ஒன்றைச் சொல்ல கடமைப்பட்டிருப்பதாகக் கருதுகிறேன். தோழ தோழி மார்களே! உண்மையிலும் சரி உயிர்களிலும் சரி சிறியது
பெரியது என்கிற பேதமே இல்லை. எல்லா உண்மைகளையும் - ஆராய்ந்து ஏற்றுக் கொண்டாக வேண்டியதைப் போல, எல்லா உயிர்களையும் - அதன் உணர்வுகளையும் - மதித்து ஏற்று பேண வேண்டியது மிக
மிக முக்கியம். மனித இனம் நீடித்து வாழவும் - இந்த பேரியற்கை ஆரோக்கியமாக அழிவற்று இருக்கவும் ( மனிதனை விட) மற்ற உயிர்கள் உயிரோடிருப்பது மிக மிக முக்கியம். எனவே, கனிவு
மிக்க தோழ தோழி மார்களே நிபந்தனையற்று, உயிர் பேதமற்று, திணை பேதமற்று, பால் பேதமற்று, இன பேதமற்று, சாதிய பேதமற்று, மத பேதமற்று எல்லா உயிர்களையும் அன்பு செய்யுங்கள்.
அன்பில் செழிக்கட்டும் பூமி. அன்பில் மகிழட்டும் உயிர்கள். அன்பின் மலரட்டும் மனங்கள்" - ஐ லவ் யூ க்களுடன் மயிரான்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...