Back

Article

July 24, 2022

கட்டுரை

SHARE

கட்டுரை

உங்கள் அன்பு, காமம், காதல், கோபம், துயரம் என எல்லாம் உங்கள் மூளையில் - எண்ணத்தில் தான் இருக்கிறது தோழர்களே. வீணே யார் மீதும் எதன் மீதும் பழி போட்டு தப்பிக்க
பார்க்காதீர்கள். நீ யாராக இருக்கிறீர்கள் அல்லது உங்கள் எண்ணம் என்னவாக இருக்கிறது என்பதில் இருந்து தான் தொடங்குகிறது எல்லாம். கண்ணோட்டம் மாறுகிறது போது எல்லாம்
மாறுகிறது. ஒரு கல்லை வன்முறையாளன், சிற்பி, விளையாட்டு பிள்ளை, கழிவறை வசதியற்ற ஊரில் மலம் கழிக்க போகும் ஒருவன் ஆகிய பேரிடத்தில் கொடுக்கிறோம் அல்லது கிடைக்கிறதெனில்
வன்முறையாளன் கல்லை ஆயுதமாக்குவான். சிற்பி கல்லை சிலையாக்குவான். விளையாட்டு பிள்ளை விளையாடவோ - கனி காய் உள்ள மரத்தின் மீதெறியவோ பயன்படுத்துவான். கடைசியாள் மலம்
துடைத்தெறிய பயன்படுத்துவான். இதை வேறு உதா வைத்து சொல்லுவேனேயானல் ஒரு பெண்ணின் முலை - குழந்தைக்கு பாலுட்டும் உறுப்பு. சிறுவனுக்கு - பாலுண்ட உறுப்பு. அவள் தந்தை/தாய்க்கு
க்கு மகளின் - உடலில் ஒரு உறுப்பு. தன்னின் மறுபிரதி. காமத்தோடு பார்க்கும் ஒருவனுக்கு - உடல் கிளர்த்தும் உறுப்பு. அந்த பெண்ணுக்கு அது உடலின் ஒரு பகுதி. இப்படி யார்
பார்க்கிறார்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதில் தான் ஒன்றின் அர்த்தம்/பொருள்/பயன் இருக்கிறதே ஒழிய அது/அவரில் இல்லை எதுவும். ஆமாம்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...