Article
April 14, 2022
கட்டுரை
SHARE

வெறுமனே அண்ணலைக் கொண்டாடுவதும் அவரின் புகைப்படத்தை பகிவர்வதும் மட்டுமே அவருக்கு நாம் மரியாதை செய்வதாகாது. அண்ணல் என்பது அவரின் புகைப்படம் மட்டுமே அல்ல. அதனால் மட்டுமே
இங்கு சமத்துவம் பிறந்திடாது.சாதிய எதிர்ப்பு, சனாதன எதிர்ப்பு, மதவாத எதிர்ப்பு, பெண்ணடிமை எதிர்ப்பு, உழைப்பு சுரண்டல் எதிர்ப்பு என எல்லாம் சேர்ந்ததே அண்ணல். கல்வியின்
வழியாக சிந்தனையின் வழியாகச் உலக உயிர்களின் கை விலங்கை உடைத்தெரியும் புரட்சியே அண்ணல். அண்ணலை முதலில் முழுதாய் படியுங்கள். சாதியத்திற்கு எதிராய் மதவாதத்திற்கு எதிராய்
வர்ண பேதங்களுக்கு எதிராய் அவரோடு அவரின் சிந்தனைகளையும் சேர்த்து பரப்புங்கள். அண்ணலின் மீது பூசப்படும் சாதிய சாயத்தை அகற்ற அவரை எல்லோருக்குமான தலைவராய் ஏந்திப்
பிடியுங்கள். அவரொரு அணையாத சிந்தனை தீ. அறிவின் பெருஞ்சுரப்பு. எல்லோருக்குமாய் ஒலித்த சமத்துவ குரல். அவரே இந்த நாட்டின் உண்மையான தேசத்தந்தை. அவரின் சொற்படி அவரைக்
கடவுளாக்காதீர்கள். அவரை ஆயுதமாக்குங்கள். எல்லோரின் விடுதலைக்குமாய் போராடுங்கள். ஜெய்பீம். நீலம் எல்லா இடங்களிலும் தெறிக்கட்டும்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...