Article
September 16, 2021
கட்டுரை
SHARE

பனி படர்ந்த வார்த்தைகள் உருகி நீராகி அவசியமற்று கசங்கிய ஆச்சரியங்களின் புருவ மடிப்புகள் நிமிர்ந்து நேராகி கிளிபோல் பேசி ஒலி கழிக்கும் சுவர்க்கடிகாரம் அயர்ந்து ஆணியில்
உறங்கும்வரை காத்திருக்க முடியாமல் காட்சியொன்றின் பல்லாயிரம் பிரதிகளால் கட்டப்பட்ட மட்டமான காவியமாய் வெறுமனே என்னை விழுங்கி உமிழும் உன் வீட்டில் மரித்தவனின் விழிச்
சாயலோடு திறந்திருக்கும் இம்மரக் கதவுகளை அரவமின்றிச் சாத்திவிட்டு விலகிப் போய்விடுகிறேன். ஒரு அந்நியனைப் போல் பூரண நிலவின் பின்னிரவுப் பார்வையில் பொன்னலங்காரமேற்று
நீளும் இவ்வீதியில் நீ காவல் வைத்திருக்கும் அச்சம் மோகினியின் கொலுசு மணிகளை கிணுக்கி முன் செல்ல மெல்ல நடை உதைத்து அர்த்தங்களின் வாழ்வு பூர்த்தியுறும் அர்த்தமற்ற பயணக்
கோடுகளின் வசீகர அழைப்போடு புவி ஈர்ப்பின் நிகர கதிகளை மீறி நிழல்போல் நடந்து மறைந்துவிடுகிறேன் எல்லைகளற்ற மர்மவெளியில் சிலையின் திறக்கப்படாத விழிகளாக நீ ஒளித்து
வைத்திருக்கும் மகத்தான சிற்பக் கூடத்தின் கதவுகள் தானாகத் திறந்து இடிகள் முழங்கி மாபெரும் திகைப்பில் கட்டி நிறுத்தட்டும் நானற்ற வெறுமையை யாருக்கும் எட்டாத கவிதையாய். -
ஜெ. பிரான்சிஸ் கிருபா. அவன் சொல் படியே "யாருக்கும் எட்டாத கவிதையாய்" ஆகிவிட்டான்
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...