Article
August 26, 2021
கட்டுரை
SHARE

கடிதம் - 02 சகி, உன்னால் நெடு நாளைக்கு பிறகு என் மன நிலத்தில் அன்பின் மழையடிக்கத் தொடங்குகிறது. நான் உன்னோடும் நீ என்னோடும் நிறைய பேசுகிறோம். உரையாடுகிறோம்.
வாதிடுகிறோம். சகி, நமக்குள் காதலென்பதே நம் கருத்தொற்றுமை தானென்று நினைக்கிறேன் நான். நீ யென்ன நினைக்கிறாய்? ஆமாம், கவிதை கேட்டால் வராதென்கிறாய். கடிதம் கேட்டால் எல்லாமே
நாம் பேசும் போதே சொல்லி விடுகிறேன் என்கிறாய். நாம் பேசுவதும் உரையாடுவதும் பொதுவான சமூக நிலைப்பாடுகள் பற்றி. சகி நான் கடிதமும் கவிதையும் கேட்பதும் என்னைப் பற்றி /உன்னைப்
பற்றி அல்லது நம்மைப் பற்றிய உன்னந்தரங்க நிலைப்பாடு. சரி விடு. நீ எழுத வேண்டாம். ஆமாம், அன்று நம் உரையாடலின் இடையே நீ ஒரு விசயம் சொன்னாயே நினைவிருக்கிறதா? "அப்போ
சால் போடாம உன் எதிர்க்க வரகூடாது போலயே" என்று. இதை நீ விளையாட்டாகச் சொன்னாயா இல்லை உண்மையிலயேவா என்று தெரியவில்லை. ஆனால் உண்மையில் எனக்கு பெண்ணை ரொம்ப பிடிக்கும்.
அதனினும் மார்பை ரொம்ப பிடிக்கும். பெரும்பாலும் எல்லோரும் மார்பை காமமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பார்க்கிறார்கள். நான் அதை சதை என்பதைத் தாண்டி கவிதையாக
பார்க்கிறேன். நான் அதில் மென்மையோடு தாய்மை இருப்பதாகவும் உணர்கிறேன். எனது அண்மை கவிதைகளில், ஒன்றான "எப்பேர்ப்பட்ட துயரான நிலையிலும் எதிர்படும் பெண்ணின் முலை தொட்டே
முகம் காண்கிறதென் பார்வை. ஊட்ட, சுரந்து உயிர் வளர்த்த இடம் இல்லையா. வளர்த்த கதை மறக்காமல் மாண்டு விழுந்தாலும் மரம் மண் தொட்டு தானே விழும். தவறில்லை." இது நீ கேட்ட
கேள்விக்கு போதுமானதாக அமையும் என நினைக்கிறேன். மேலும் சகி, தாய்மை என்பது பெண்ணின் அடிமைத் தளைகளில் ஒன்றாக இருக்கிறது எனினும், நான் அதை அன்பின் வடிவமாக, அன்பின் உச்சமாக,
அன்பின் ஊற்றாக பார்த்து பழவிட்டதால் அந்த அன்பின் சுரப்பை எல்லோரிடத்திலும் தேடி அலைகிறேன். இந்த தேடலுக்கு தாய்மை என்பதை குறிப்புச் சொல்லாக வைத்துக் கொண்டு விட்டேன்.
மேலும் சகி, உனக்கு எனக்குமான இந்த பந்தம் நிலையானதில்லை என்பதை நீயும் நானும் அறிவோம். ஆனாலும், நாம் பிரித்து போனாலும் என்னுள் எப்போதும் போல உனக்கான காதல் இருந்து கொண்டே
இருக்கும். மரம் செத்தே போனாலும் மண் அதன் வேரை தன்னகத்தே தானே வைத்திருக்கும். அது போல தான் நானும். மேலும் இன்னொரு விசயமும் கூட நாம் பேசினோம் "ஏத்துக்க மனச
வந்துடுச்சா?" என்று நீ கேட்டதற்கு நான் கூட அதற்கு "பொண்ணு ஒன்னும் பொருளோ தின்பண்டமோ இல்ல.. இன்னொருத்தன் எச்சி பண்ணிட்டான் நான் ஏத்துக்க மாட்டேன் னு
சொல்ல" என்று. இது வெறும் வாய் வார்த்தை இல்லை சகி. நிஜம். இப்போதைய நம் பந்தம் நிலையானதில்லாமல் இருக்கலாம். ஆனால் எப்போது வேண்டுமானால், உனக்கு விருப்பம் இருந்தால்
என்னிடம் வரலாம். அப்போதும் இதே காதலோடு உன்னை வரவேற்று கடிதங்களும் கவிதைகளும் எழுதி காதலிப்பேன். ஐ லவ் யூ. - எங்கெல்லாம் முடியுமோ இல்லை, நீ கொடுக்க அனுமதிக்கிற அனைத்து
இடங்களுக்குமான முத்தங்களுடன் உன் பித்தன்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...