Back

Article

August 22, 2021

கட்டுரை

SHARE

கட்டுரை

அழு.
மண்டியிடு.
கர்வம் கழட்டி வைத்து
காலில் விழு.
இறுமாப்புகளை
இடித்து தள்ளி
கை கூப்பு.
மணிக்கட்டை அறுத்து
ரத்தம் காட்டு.
எப்படியேனும்
அவர்களின் மீதான
உன் அன்பின் உறுதி உணர்த்து.
அல்லது
அவர்களற்று நீ வாழப் போகும்
வாழ்வின் துயருணர்த்து.
எது செய்தேனும்
எவரொருவரின் இருப்பு
உன் வாழ்வுக்கு பொருள் கூட்டுதோ
அவரை பிரிய விடாதே.
தக்க வை.
பரஸ்பரமாய் பற்றிக் கொள்ள பார்.

அப்படி இல்லாமல்
கர்வ மிகுதியில்
கண்டு கொள்ளாமல் இருந்து
அவர்கள் போன பிறகு
பொழுதுக்கும் அழுது புலம்பி
அரற்று வாயென்றால்
இப்போதே செத்து போ.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...