Back

Article

August 20, 2021

கட்டுரை

SHARE

கட்டுரை

எல்லார் முன்னிலும் நம்மால்
அழுது விட முடிவதில்லை.

அழாதடா என்று
கோதி விடும் சில கைகள் மட்டுமே
நம் கேவல்களைக் கூட
ஓலமாய் மாற்றி
துயரின் பாரமிறக்கி
துயிலாழ்த்துகின்றன.

அப்படியொரு அன்பான
அடைக்கல ஸ்பரிசத்தை
இதுவரை
உன் கைகளில் மட்டும்
உணர்ந்திருக்கிறேன் சகி நான்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...