Back

Article

May 18, 2021

கட்டுரை

SHARE

கட்டுரை

காற்றில் எந்தன் கீதம் பாடலுக்கான மாற்று வரிகள். இதுவும், எழுதி ரெக்கார்டிங் பண்ணி நாலஞ்சு மாசத்துக்கு மேலாகுது. ஆனா வெளியிட முடியல. Producer இல்ல.இதே போல ஒரு நாலு
பாட்டு யூடிப் ல கூட இருக்கு. Channel லிங்க் :- https://youtube.com/channel/UCzPs7PQN_EPkoNFZxnF5VzQ குரல் :- ஜனப்ரீத்தி வரிகள் :- நானே. பாட்டில் எந்தன் சோகம் இல்லாமல்
எங்கோ போகுதே.... காற்றோடு காற்றாக உள்சென்று உயிரைத் தீண்டும் ராகப் பாட்டில் எந்தன் சோகம் இல்லாமல் எங்கோ போகுதே.... வானெங்கும் சின்னக் குயில் கானம் பாட நெஞ்செங்கும்
நினைவின் ஓட்டம் முள்ளாய் கீற வலிகொண்ட வாழ்வே மாறாதோ வலியாற்றும் மருந்தாயிசை ஆகாதோ.. என்னை... திரியாய் எரிக்கும் வலியை மெல்ல ஆற்றும் பாட்டில் எந்தன் சோகம் இல்லாமல் எங்கோ
போகுதே.... காற்றோடு காற்றாக உள்சென்று உயிரைத் தீண்டும் ராகப் பாட்டில் எந்தன் சோகம் இல்லாமல் எங்கோ போகுதே.... இல்லாத விரலால் இசை உயிரைத் தீண்டும் இறகாக மனதை அது மெல்லத்
தீண்டும் மனம்கொண்ட சோகம் தீராதோ மழை கொண்ட மேகம் வாராதோ ஊனில்.... உயிராய் உறையும் இசையை உள்ளம் வேண்டும் பாட்டில் எந்தன் சோகம் இல்லாமல் எங்கோ போகுதே.... காற்றோடு காற்றாக
உள்சென்று உயிரைத் தீண்டும் ராகப் பாட்டில் எந்தன் சோகம் இல்லாமல் எங்கோ போகுதே....

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...