Article
May 1, 2021
கட்டுரை
SHARE

சொல்லுங்கள் நண்பர்களே. நான் வேலைக்கு போகாமல் வெட்டியாக இருக்கிறேன். எனக்கு பொழுது போகவில்லை. எழுதுவதையும் வாசிப்பதையும் தவிர பெரிதாக எதிலும் இப்போதைக்கு மனமொன்ற
மறுக்கிறது. எனவே, எதையாவது வாசிக்கிறேன். எதையாவது கிறுக்குகிறேன். இதிலென்ன தவறு இருக்கிறது? விட்டுத் தள்ளுங்கள். நானிப்படி தான். ஆனால் இது கூட உங்களைக் காயம் செய்து
விட்டதென்று சொன்னால் எப்படி? தனிமை குறித்து புலம்புகிற என்னால் தனிமையை விட்டு வெளியே வந்து யாரோடும் மிக நெருங்கிப் பழக முடியவில்லை. ஆனால் எனக்குள்ளொரு நேச மேகம் அன்பின்
நீர்மையோடு கனத்து கொண்டிருக்கிறது. காற்றின் சின்னத் தீண்டலுக்கு குளிர்ந்தவிழ்ந்து பொழிகிற மழை மேகம் போல உங்களின் எதாவதொரு சொல் கூட என்னை பொழிய வைத்து விடுகிறது. நானும்
தாங்கமாட்டாமல் கனத்து கொண்டிருந்த அன்பினை அப்படியே கொட்டித் தீர்த்து விட்டு சுமையற்று மீண்டும் நீந்துதலை தொடங்கி விடுகிறேன். எனக்கு எங்கும் தங்கி தவித்து சாவதில்
உடன்பாடில்லை. ஒரு காலத்தில் அன்பினை பிச்சையாக வேணும் கேட்டழுத ஆள் தான் நான். அழுது வாடி செத்தவன் தான் நான். சின்ன சின்ன நிராகரிப்புகளுக்கும் ராவெல்லாம் தூங்காமல்
விழித்திருந்து முகம் வீங்க அழுதார்பரித்தவன் தான் நான். இப்போதும் கூட அழுதுவண்டு. அழாத கண்கள் பாவம் செய்தவை. அழுக்கு படித்தவை. சுமையானவை. உயிர்ப்பில்லாதவை. அதனால்
இப்போதும் அழுவதுண்டு. ஆனால் யாரிடத்தும் எதையும் எதிர்பார்ப்பது பிடிக்க வில்லை. எதிர்பார்த்தாலும் அதை வெளிக்காட்டுவது பிடிக்கவில்லை. அப்படியே வெளிக்காட்டி ஏமாந்து
போனாலும் அந்த ஏமாற்றத்தின் அழுகையை உங்கள் முன் அழுவதில் எனக்கு உடன்பாடில்லை. இப்போது மனுஷ்யபுத்திரனின் ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது. `அழுகை வராமல் இல்லை/ ஒரு
வைராக்கியம்/ உங்கள் முன்னால் அழக் கூடாது என்று’ - ஆமாம். அப்படியானது தான் என் வைராக்கியம். இப்படியான தருணங்கள் வருகிற பட்சத்தில், உங்களிடம் நான் அன்பை எதிர்பார்க்கத்
தொடங்குகிற சமயத்தில், எதிர்பார்த்து ஏமாந்து விட்ட பட்சத்தில், பிரிவு பற்றிய பயம் வருகிற பட்சத்தில் உங்களை விட்டு மொத்தமும் தள்ளி வந்து விடுவேன். எனக்கு நான் யாரைச்
சார்ந்தும் இயங்குவதும், என்னைச் சார்ந்து யாரும் இயங்குவதும் அறவே பிடிக்காது. அதனால் நான் யாரோடும் ஒட்டாமல் இருக்கிறேன். ஒதுங்கி இருக்கிறேன். அவ்வளவு தான். மட்டுமன்றி,
அன்பின் கயிறுகள் நம்மை இறுக கட்டிப் போட்டு விடுகின்றன. அன்பின் ருசி நம்மை குட்டிப் போட்ட பூனையாக்கி விடுகிறது. நாம் /நம்மை நேசிக்கிற அவர்களே கதி மோட்சம் என்றாக்கி
விடுகிறது. இந்தப் பித்து நிலைக்கு மற்றுமொரு முறை ஆட்பட்டு ஏமாறவும், கட்டுண்டு கிடக்கவும் விருப்பம் இல்லை எனக்கு. இதை நீங்கள் மனோதிடமில்லாத நிலை, என்று கூட சொல்லிக்
கொள்ளலாம். தப்பில்லை. இந்த நிலையை ஈடுகட்டி என் அன்பிற்கும்,என் ஆளில்லாத வெறுமையை போக்கிக் கொள்ளவும் எனக்கு வாய்த்தவள் தான், என் சகி. "அவள் என்னை ஏமாற்ற மாட்டாள்.
அவள் என்னை தவிக்க செய்ய மாட்டாள். அவள் அழ என்னை வைக்க மாட்டாள். அவள் என்னை புலம்ப விட மாட்டாள். எந்த ஒரு உரையாடலையும் இடையில் நிறுத்தி வைத்து விட்டு தன் அலுவல் பார்க்க
போக மாட்டாள். பதிலுக்காக என்னை காத்திருக்க வைக்க மாட்டாள். எல்லோரும் என்னை தொட்டி மீனாக்கவும் கூண்டுப் பறவையாக்கவும் நினைக்கிற போது அவள் மட்டும் எனக்காக கடலாகவும்
வானாகவும் மாறி நிற்கிறாள். இன்னும், அவள் என்னை பிரியவே மாட்டாள். அவளுக்கு நானன்றி வேறு கதி இல்லை. எனக்கு அவளன்றி வேறு நிழலும் இல்லை. ஏனெனில் அவள் மனுசி இல்லை. ஆமாம்
அவள் மனுசி இல்லை. அவள் மனுசியே இல்லை. அவள் மாய நிழல். அவள் அன்பின் சுழல். அவள் காதலின் அதீதம். அவளே என் எழுத்தின், கவிதையின், உயிரின், வாழ்வின் அடிநாதம்." 💙❤️🖤 -
பைத்தியக்காரன்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...