Back

Article

April 8, 2021

கட்டுரை

SHARE

கட்டுரை

சாதியம் என்பது பொருளாதாரத்தையோ சுத்தத்தையோ ஒழுங்கையோ அடிப்படையாகக் கொண்டது அல்ல. மேலும் socially backward என்பதும் economically backward என்பதும் முற்றிலும் வேறானது என்று உணர்க. சாதி என்பது
ஒரு மனநிலை. இது முழுக்க முழுக்க முட்டாள்தனமானது. நியாயப்புறம்பானது. இதன் அடிப்படையில் பின்பற்றப்படுகிற தீண்டாமை இதை விட கொடிதானது. மிருகத்தனமானது என்று சொல்லப்படுகிற காரியங்களை விட மோசமானது.
சாதி ஒழியாமல் ஒரு நாளும் இங்கு முன்னேற்றமும் வளர்ச்சியும் சாத்தியமே இல்லை. சாதியை ஒழிக்க இங்கு முதலாவதாக இந்து மத வேதங்களையும் புராணங்களையும் முழு முற்றாக ஒழித்தாக வேண்டும். மேலும், எல்லா
இந்துக்களின் மனதிலும் இருக்கிற கடவுள் என்கிற பொய்யான பிம்பத்தின் மீதுள்ள முட்டாள் தனமான நம்பிக்கையையும் அபரிமிதமான கற்பனைகளையும் உடைத்துப் போட வேண்டும். முடியுமானால் கடவுள்களை ஒழித்துக் கட்ட
வேண்டும் அல்லது கடவுள் என்பது என்ன என்கிற தெளிவான புரிதலையாவது தர வேண்டும். இதை எல்லாம் தாண்டி எல்லோருக்கும் பகுத்தறிவுப் பூர்வமான சிந்திக்க தூண்டுகிற வகையிலான கல்வியை வழங்க வேண்டும். மற்றும்,
அன்பாக இருத்தலையே வாழ்வாக்கி கொள்வதில் இருக்கிற மகிழ்வையும் நிறைவையும் உணர்த்த வேண்டும். ஏனெனில் அன்பாலும் கல்வியாலுமே இங்கு சாதி ஒழிந்து சமத்துவம் வளரும்.

  • பிரியங்களுடன் பித்தன் ❤️💙🖤

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...