Back

Article

December 28, 2020

கட்டுரை

SHARE

கட்டுரை

என் எழுத்தை வாசித்து விட்டு என்னை சந்திக்கிற பெரும்பாலானவர்கள் சொல்கிற வாசகம் " நீ/ நீங்க தான் இப்படி லாம் எழுதுறீங்கனா நம்ப முடியல. ஆளுக்கும் எழுத்துக்கும்
சம்மந்தமே இல்ல" இந்தக் கருத்தை எப்படி பார்ப்பது என்றே தெரிய வில்லை. என் சக்திக்கும் மீறி எழுதுகிறேன் என்று எடுத்துக் கொள்வதா அல்லது இப்படி இருக்கிற நான் இப்படி
எல்லாம் எழுத லாயக்கற்றவன் என்று எடுத்துக் கொள்வதா? தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன். என்னை / என் உணர்வுகளை எந்த ஒரு முக மூடியும் இல்லாமல் முழுக்க
வெளிப்படையாக, எனக்குள் இருக்கிற எல்லா" நான்"களையும் தணிக்கை செய்யாமல் வெளிக் காட்டிக் கொள்ள உதவுவது என் எழுத்து. நான் நானாக இருக்க முடிகிற இடம் என் எழுத்து
தான். மேலும், எழுத்தளவில் யாருக்காகவும் எதற்காகவும் எதையும் நான் சமரசம் செய்து கொள் வதில்லை. அதனால் தானோ என்னவோ அவர்களுக்கு அப்படித் தோன்றுகிறது போல. And I have to
convey one more thing"don't judge a book by its cover."

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...