Back

Article

August 15, 2020

கட்டுரை

SHARE

கட்டுரை

அம்மா இன்று காலை கொஞ்சம் புலம்பித் தள்ளினாள்.
"என்னடா கடையில ஓட்டமே இல்ல.. எல்லாமே உன்னால தான்..எப்படி வாங்குன கடனலாம் கட்டப் போறியோ.. சாமிய மதிச்சா தான.. இல்ல இல்ல னு சொல்லி கிட்டு இரு.. இல்லாம தான் போக போற" என்று.

அதற்கு நான் சொன்னேன் " இப்போ னு மட்டும் இல்ல .... ஒரு ரூவாய்க்கு கூட வியாபாரம் ஆகாம போனாலும்.. அந்த சாமிய நான் கும்புட மாட்டேன். "

காலையிலே என்னோடு சண்டை எதற்கென்று நினைத்தாலோ என்னவோ அல்லது அதற்கடுத்து நான் என்ன சொல்வேன் என்று புரிந்து கொண்டு விட்டாளோ என்னவோ அதற்கு மேல் ஒன்றும் பேசாமலே போய் விட்டாள்.ஆமாம். "சாதி இல்ல
னு சொல்லுங்க... சாதிய விட்டொழிங்க அப்பறம் கேட்கறேன் நீங்க சொல்றபடி " எனத் தான் இது போலான சமயத்தில் நான் சொல்லியதுண்டு சொல்வதுமுண்டு.

// //

சாதியும் மதமும் தீண்டாமையும் விட்டொழிக்கபடுமாயின் இல்லாத போதிலும் உங்கள் கடவுளரை ஏற்பதில் எனக்கு மறுப்பில்லை.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...