Back
Article
April 9, 2020
கட்டுரை
SHARE

நான் ஒரு வனாந்தரத்தின் பிள்ளை.
என் இதயம் - ஒரு பிடி மண்.
என் ரத்தம் பச்சை நிறமானது.
என் இரத்த நாளங்கள் வேர்களால் ஆனவை.
இலைகள் எனது ஆடை.
கால மாற்றத்திற்கேற்ப
ஆடை களைந்து
மாற்றாடை புனைவதென் வழக்கம்.
மரப்பட்டையே எனது தோல்.
எப்போதேனும் ஒரு மரத்திற்கு
உங்களால் நீரூற்ற முடியுமானால்
அது எனக்கு நீங்கள்
ரத்த தானம் செய்ததற்கு நேர்
ஏனெனில்
நான் ஒரு வனாந்தரத்தின் பிள்ளை. .
❤️
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...