Article
April 8, 2020
கட்டுரை
SHARE

நான் பிறவாத காலத்திற்கு முன்பிருந்தே அத்தறுத்து ஓடிக் கொண்டிருக்கிறதாம் அந்த நதி. அதன் போக்கு எப்போதும் வாள் வீச்சைப் போல வேகமாய் தான் இருக்கும். அடிக்கடி அதன் கரையில்
நின்று தண்ணீர் பிராவாகத்தில் தலை கீழாய் தெரியும் என்னை ரசிப்பது எனது வழக்கம். இன்றும் அப்படி தான் போனேன். கரையோரமாய் ஒரு கூழாங்கல். கையிலெடுத்தால் உள்ளங்கையெல்லாம்
உஷ்ணந்தணிக்கும் நதியின் குளுமை. உற்றுப் பார்த்தால் என்னை எனக்கே பிம்பமாய் காட்டும் நதி நீரின் பிரதிபலிக்கும் தன்மை. கல்லுக்குள் ஒரு நதியா? இல்லை நதி போல ஒரு கல்லா? கால
ஓட்டத்தை விட இந்த நீ ரோட்டம் அந்தக் கல்லை எவ்வளவு புடம் போட்டிருக்கிறது? எத்தனை அடிவாங்கி எத்தனை ஏற்றம் எத்தனை இறக்கம் கண்டு கடந்து இத்தனை குளுமையாயும் இத்தனை வழ
வழப்பாயுமாய் ஆனதோ தெரிய வில்லை அந்தக் கல். இவ்வளவு அனுபவச் செழுமைக்கு அப்புறமும் அந்தக் கல் எந்தக் கர்வமுமின்றி தான் இருக்கிறது. மனிதன் மட்டும் தான் அடி வாங்க
அஞ்சுகிறான். வாழ் வெனும் நதி விட்டு நகர்கிறான். சிறிதாகப் வளர்ந்தாலே பெரிதாக கர்வப்பட்டுக் கொள்கிறான். இன்னும் மனிதன் கற்றுக் கொள்ள ஏராளமிருக்கிறது. முதலில் நான் இந்தக்
கல்லிடமிருந்து கற்கத் தொடங்குகிறேன். ❤️
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...