Back

Article

April 4, 2020

கட்டுரை

SHARE

கட்டுரை

பச்சை இலையோடு நிழல் பரப்பிய கிளையோடு சுற்றிச் சூழ்ந்து அத்தனை மரமிருக்க அந்தி சாய்ந்ததும் இடி இறங்கி இலை, கிளை இழந்து மொட்டையாய் நிற்கும் அந்த மரத்திற்கு அந்தப்பறவை
எதைத் தேடி வருகிறதோ? / / ஒன்றும் இல்லாத அந்த மொட்டை மரத்திற்கு வந்து போகும் பறவையறியும் இழப்பின் வலியாதென. / / வேர் செத்த மரத்திற்கு தினமும் வந்து போகும் பறவையிடம் யார்
சொல்வது அதன் கூடும் குஞ்சும் போன மாதம் விழுந்த இடியில் மரத்தோடு மரமாய் கருகிப் போய் விட்டதை? / / நேசத்தின் வழித்தடத்தை பிடித்து கொண்டு செத்த மரத்திற்கு வந்து போகும்
அந்தப் பறவை அறியும் அன்பு தந்த அடைக்கல நிழலின் குளுமையை. - ர. அஜித்குமார் (பித்தன்)

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...