Back

Article

March 25, 2020

கட்டுரை

SHARE

கட்டுரை

பித்துடையோன் பிதற்றி தெளிவான்.
நினைவு மத்தால் நெஞ்சை கடைந்து
கவிதை செய்வான்.
இருந்தாற் போல் இருந்து ஐயோ என்பான்
அம்மா என்பான்.
அம்மு என்பான்.
அம்மு வை சகி என்பான்.
வா சகி என்றழைப்பான்.
சகி வரும் வரை .
வாசிப்பான்.
வாசித்து யோசிப்பான்.
தனக்கு தானே பேசிப்பான்.
சகி வரவில்லை என்றால்
சாவை அழைப்பான்.
அதுவும் வரவில்லை என்றால்
மீண்டும் பித்தாவான்.
பிதற்றுவான்.
தெளிவான்.
தெளிந்து புலம்பி
புலம்பி தெளிந்து
ஒரு நாள் அழிவான்.
அழிவேன் - நான் - அந்த வான்.

❤️

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...