Article
March 25, 2020
கட்டுரை
SHARE

சகி, நீ கேட்டாயே அன்றொரு நாள் ஏன் உனக்கு அதன் மேல் அத்தனை ஆசை யென்று நான் கூட சொன்னேனே அஜித்குமார் என்று பேரிலே மார் இருப்பதால் அதன் மேல் அத்தனை ஆசை போல என்று நினைவு
இருக்கிறதா? சிரிக்கிறாயா? சகி.. காரணம் அதில்லை. முலையுண்டு வளர்ந்தவன் முலை விரும்புதல் தவறில்லையே சகி. உன்னிருங் கனத்த முலைகளில் காமத்தையும் தாய்மையையும் ஒரு சேர
பருகுகிறேன் நான். அந்தச் சந்தன நிறத்து சதைத்திட்டுகளில் என் முகத்தோடு துயரையும் புதைத்து விடுகிறேன் சகி. நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டுத் தான் எல்லோருக்கும்
பெய்யுமாம் மழை. ஆனால் உன் மார்பு அப்படி இல்லை சகி ஈனிய மகவு எப்படி பட்ட பிள்ளையாகினும் இரண்டு முலை நிறையவும் சுத்தப் பால் சுரக்கும். சகி, உன் வலச் சிறு முலையோடு வாய்
பொருத்தி வாலிப பசி தீர்த்துக் கொள்ளும் நான் இடப்பெரும் முலையோடு உதடு பொருத்துகையில் உன் இதயத்துடுப்பு உதட்டோடு கேட்கும் கணம் காமக் கிளரச்சியடங்கி உனக்கு பிள்ளையாகி
போகிறேனடி. - பித்தன் (ர. அஜித்குமார்)
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...