Article
March 27, 2019
கட்டுரை
SHARE

கண்மணியே
என் உயிரானவள் நீ..
உன்னை எண்ணாமல்
என்னொரு நாளும் விடியாது..
ஊனுயிர் ஆனாய் நீ..
நிமிச நேரமும்
நீயும் உன் நினைவுமற்று வாழ என்னால் முடியாது..
பொன்னே..
பொங்கி நிற்கும் அமுதே..
என் மேல் அன்பு மழை பெய்யும் விண்ணே..
என் வாழ்க்கை உன் அன்பாலே அர்த்தமாகி இருக்கிறது..
நான் பாடையிலேறும் நாள் வரை..
பாசம் செய்..
முத்தங்கள் வேண்டாம்..
முலையூட்டல் வேண்டாம்.
நித்தமும் அன்பு செய்..
நிமிச மும் நீங்காதிரு..
தோல் சுருங்கி
பார்வை மழுங்கி
நினைவு தப்பிப் போனாலும்..
அன்பு செய்ய மட்டும் மறக்காதே அன்பே..
மலை தாண்டி விழுந்து
பள்ளம் கடந்துருண்டோடி
கடைசியாய் கடல் சேரும் நதி போல
என்ன ஆனாலும்
எங்கு போனாலும்
இறுதி யாய் நான் உன்னையே சேர்கிறேன்..
என் பிழைகளை பொறு..
என்றும் என்னை பிரியாமல் இரு..
தினம் தினம் தீராமல் மாறாமல் பிரியம் செய்.. போதும்
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...