Article
December 25, 2015
கட்டுரை
SHARE

#என்னவள்_பேசுகிறாள்
சிந்திக்கிறேன்
சிந்திக்கிறேன்
எதற்காக
என்னை அவன் வெறுத்தான்
சிரிக்கிறேன்
சிரிக்கிறேன்
என்னை வெறுத்ததற்கு
அவன் சொன்ன காரணங்களை எண்ணி
விளையாட்டு
பிள்ளை அவன்
எதை எப்படி
எடுத்துக் கொள்வதென்றே
தெரியாது அவனுக்கு
சின்ன சின்ன
விஷயங்களுக்கும் பயம்
எதற்குமே
அழமாட்டான்
காரணம் கேட்டால்
"நான் கல் நெஞ்சக்காரன்" என்பான்.
அதெல்லாம் பொய்
ஆனால்
அவன் பெரிய
அழுத்தக்காரன்
எதையுமே
யாரிடமும்
சொல்ல மாட்டேன்
ஏன்????
இந்தக் காதலைக் கூட அவனா சொன்னான்
இல்லை
நான்
நான் தான்
காதலை கட்டுப்படுத்த தெரியாமல்............
சொன்ன பின்னும்
உள்ளிருக்கும் காதலை
ஒப்புக் கொண்டானா
இல்லை
மௌனம் காத்தான்
உதடு திறந்தால்
உளறி விடுவோமா என்று.
எப்படியோ வாதாடி
வார்த்தைகளாய்
வாங்கி விட்டேன்.
ஆனாலும்
ஒரு நெருக்கமில்லாமல் தான்
இருந்தான்.
சின்ன சின்ன
சண்டைகளால் தான்
என் மீதான
சிநேகிதம் அதிகமாக்கினேன்.
நெருங்கினான்
நெருக்கமாகினான்
யாரும் பிரிக்க முடியாத அளவிற்கு
பிரியத்தோடு.
விலகினான்
விலகினான்
காந்தத்தின் ஒரே
துருவங்களைப் போல
நெருங்க
நெருங்க
விலகினான்
சிநேகிதர்கள்
கேலிச் செய்கிறார்கள் என்று.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...