Back
Article
February 9, 2019
கட்டுரை
SHARE

யாரிந்த காற்றுக்கு
பாடக் கற்றுக் கொடுத்தது...
உருவற்ற விரல் கொண்டு
உயிர் தீண்டுகிறது..
உடம்பின் அணுவிலெல்லாம்..
உற்சாகத்தை ஊற்றி நிரப்புகிறது..
மெழுகின் உச்சுயேறி உருக்கும் சொட்டுத் தீயாய்..
காதுக்குள் நுழைந்து..
நெஞ்சுருக்கிறது..
கடவுளை போலத் தான்
கண்ணுக்கு தெரியாமலே வந்து
கவலை போக்குகிறது..
மனத்தின் கனம் குறைத்து ..
அதன் ரணங்களை..
மயிலிறகாய் வருடுகிறது...
வலது காதிலிருந்து..
இடது காதுக்கும்
இடது காதிலிருந்து
வலது காதுகுகும்
இசை உருண்டோடும் போது..
மனது இளகி இளகி..
உருகி உருகி
எடை இழந்தது
திசைத் தொலைத்த பறவையாய்..
வான வெளி எங்கிலும் திரிந்தலைகிறது..
#ராஜா
❤️
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...