Article
February 7, 2019
கட்டுரை
SHARE

பூக்கள் இல்லா
மரத்தை தேடி
வண்டுகள் ஒன்றும் வாராது..
காற்று வந்து
நுழையா மூங்கில்
புல்லாங்குழலாய் மாறாது..
இருப்பை வைத்து
நெருங்கும் சொந்தம்
எனக்கு ஒன்றும் வேண்டாம்..
சொல்லாமலே நில்லாமலே
மேகம் போகும் காற்றின் திசையில்..
அதுபோல்.... அதுபோல்
போவேன்.. போவேன்..
நானும்..
காசில்லா வாழ்க்கை வாழ..
மாசில்லா மனசோடு துணிந்தேன்..
ஆனாலும்
தூசு வந்து விழாமலே
கண்ணில் நீர் வரச் செய்யுதே வாழ்க்கை..
யேசுநாதர் படைத்து வைத்த
ஏதேன் தோட்டத்தில் வாழ..
உடைகள் வேண்டாம்
உணவும் வேண்டாம்..
ஆதாமாகி அங்கே திரிவேன்..
மினுகட்டாம் பூச்சி போல..
எனக்குள்ளே விளக்காய் எரிவேன்...
போதும்.. போதும்..
எனை துரத்தி துளைத்த..
துயரங்கள் யாவும்..
அழுது ஓய்ந்த மனம்
இப்படி தான் இலக்கியத் தனமாய் புலம்பிச் சாவும்..
அது தனிமை தீயில் சாம்பலற்று வேகும்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...