Back
Article
December 22, 2015
கட்டுரை
SHARE

யாரிவள்...???
நூலினும்
மெலிந்த இடை
நத்தையினும்
மெதுவான நடை
குலை வாழையினும்
தலை குனிய செய்யும் நாணம்
அலையினும்
நிலை நிற்கா கூந்தல்
நிலவினும்
அளவிலா ஒளிமுகம்....!
கணகள் கூசுகிறது(நான் கண் மூடிக் கொண்டேன்)
எப்....பாஆ
இப்படி அழகுடைய மங்கையிவள்
எதற்காக
என்னை நெருங்குகிறாள்
என்ன இது
தழலினும்
சூடனா இதழால்
என் இதழ் சுடுகிறாளா?
சுடுகிறது சுடுகிறது
போதும் போதும்
சூடு தாங்க முடியவில்லை
எடுத்துவிடடி
உன் உதட்டை
என் உதட்டிலிருந்து......!
எடுத்துவிட்டால் போல கண்விழித்துப் பார்க்கிறேன்
கையில் காபி கோப்பையுடன் கட்டிலருகில் நிற்கிறாள் என் மனைவி.
#குறிப்பு:இது எல்லாம் கற்பனையே
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...