Back

Article

June 10, 2018

கட்டுரை

SHARE

கட்டுரை

இந்த உலகின் சகலத்திலும் ஒரு சௌகரியமின்மையை உணர்கிறேன். நான் செலுத்துகிற அனைத்தும் பிணத்தின் மீது சாத்தப்பட்ட மாலையென யாருக்கும் உதவாததாகிறது. ஏன் அதற்கெனத்தான் வாங்கப்பட்டதெனினும் பிணத்திற்கே
அதனாலொரு பிரயோசனமும் இல்லை. இதில் பிறருக்கெப்படி.? இங்கு எல்லாம் போலிகளின் நிழலுருக்களென உணர்கிறேன்..யாதும் பொய் வாசம் வீசிகிறது. உங்கள் அன்பின் நெடியெல்லாம் பிணவாடை ஒத்ததாயிருக்கிறது.ஒரு
தீராத தாகத்தோடு திரிகிறேன். எதிர்பார்ப்பில்லாமல் நேசப் பொழிவை நிகழ்த்து மொரு மேக உள்ளம் தேடி ஓடிக்கொண்டிகிறேன். ஆனால் இதுவரை மேகமென்றும் நேசக் கோர்வை என்றும் நம்பினதெல்லாம் வெறும் புகைத்
திட்டு, நச்சுத் திரட்சி. நான் நம்பின எல்லாமும் அவநம்புதலை உண்டு பண்ணி ஒரு துரோத் தழும்பை தான் தந்து போயின. என்னிடமிருந்து வாங்கிக் கொண்டதை கூட திருப்பிக் கொடுத்திருக்க வில்லை. வெறுமனே
நிரம்புதலுக்காக ஒன்றினை இட்டு நிரப்பி... அதில்லாமல் போன பின் மற்றொன்றை வேண்டி அதன் காலடியில் மன்றாடுவதற்கு பதில் வெற்றிடமாகவே இருந்து விடுகிறேன்.விட்டு விடுங்கள்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...