Article
June 9, 2018
கட்டுரை
SHARE

❣️நீயறியா பொழுதொன்றில்
நான் இறந்திருக்க கூடும்.
❣️ஏதேதோ
நினைவுகளின் நெரிசலினிடையில்
என்னை நினைக்க மறந்திருப்பாய்
அல்லது என் சாவுக்கு
அஞ்சலி செலுத்த உனக்கு நேரமிருந்திருக்காது. .
❣️மீண்டுமென் ஞாபகம் வரும் அல்லது
நேரம் கிடைக்கும் வேளையில்
என்னை தேடுவாயா? என்பதும்
நேரமிருந்தாலும் என் ஞாபகம்
உனக்கு மீளுமா என்பதும்
எனக்கு இதுவரையில் தெரிந்திருக்க வில்லை.
❣️இறந்த பின்னும்
உன்னிந்த கண்டுகொள்ளாமை எண்ணி
என் ஆத்ம
சில காலம் அழுது தீர்க்கும்.
❣️ஏன் சாந்தியடையா
ஆத்மாக்கள் பேயாய்
அலைவதுண்டாமே...
அப்படி நானும் அலைந்தாலும் அலை வேன்.
❣️பயப்படாதே
உன்னை எதாவது
செய்வதெல்லாம் என் ஆசையாயிருக்காது..
❣️நீ பயந்து நடுங்குமந்த பேய் பொழுதிலேனும்
என்னை நினைத்து கொஞ்சம்
அழுது விடு.... அவ்வளவுதான்...
உன் அன்பிலுறிய
அந்த துளிகளை எண்ணி பார்த்து எண்ணி பார்த்தே
என் ஆத்ம சாந்தி அடைவேன்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...