Back

Article

May 4, 2018

கட்டுரை

SHARE

கட்டுரை

குழலுமிழ்ந்த தேன்குரலே - நிற்க
நிழலுமிழ்ந்த நெடுமரமே
மணமுமிழ்ந்த பூச்சரமே - என்றன்
மனக்குளம் பூத்த தாமரையே
ஆசை ஊற்றெடுக்கும் மாமலையே - எனை
ஆட்டுவிக்கும் பெரும்பறையே
உளம் ஆளுகின்ற இரும்பொறையே - என்
நலம் பேணுகின்ற தாயுறவே
நான் வேண்டுவது பாயுறவா? - அடி
நானிழந்த பெருவிரலே
நான் வேண்டுவதெல்லாம் - நம்
நரை நாள் வரை காதலும்
நாளும் சிறு மோதலும் - காதினிக்க
கேட்க உன் குரலும்... தானடி
என் தங்கமே.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...