Article
December 10, 2017
கட்டுரை
SHARE

நீலக் கனவுகள்
உதிரும் இரவில்
நீட்டி படுத்து
நீலக் கண்களை
உருட்டி உருட்டி விழித்திருந்து
ரம்மிய ராத்திரியின்
நீளத்தை அளந்து கொண்டிருக்கிறேன்.
குருட்டு பூனை விட்டத்தில் பாய்ந்ததை போல்
என் இருட்டுப் பார்வையும் விட்டத்திலே
விழுந்து கிடக்கிறது.
நீளத்தனிமையின் அமைதியில்
மன ஆழத்தில்
வெளிச்சம் இழையோடுகிறது.
மனக்கடலில்
ஆயிரமாயிரம் அலைகளெழும்பி
அடங்குகிறது.
மனம் தன்னை
அடிக்கடி உருமாற்றி
அழுது அழுது
அழகு பார்க்கிறது.
வாலிபச் சுமையழுத்த
உறங்க முயலும்
மூதிர்கன்னியாகி
கவிதை முந்தானையில்
கண் துடைக்கிறது.
மலட்டு பட்டம் வாங்கி கொண்டு
கருப்பையில் கனமேற
நெஞ்சுக்குள் ரணமேறி
இந்த மழைக்கால தவளைகளின் தாலாட்டில்
அழுதுறங்கி போன பெண்ணாகி
மை விந்தில்
எண்ணப் பிரசவம் செய்து
ஏக்கம் தீர்க்கிறது.
பெற்ற பிள்ளை
உற்ற துணை இரண்டும்
உதறி தள்ளி
ஆசிரம படுக்கையை
அழுது நனைக்கும்
கிழட்டு தாயாகி
மௌனத்தில் புதைத்திறந்த
வார்த்தை பிண்டங்களை
பிரியமொழுக பேரன்புடன்
கொஞ்சிக் கொண்டிருக்கிறது.
அழுது களைத்த
கண்ணும் மனமும்
கண்ணீரழுத்தத்தில்
மெல்ல மெல்ல
கவிதை மடியில்
உறங்கிபோகின்றன.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...