Back

Article

December 6, 2017

கட்டுரை

SHARE

கட்டுரை

போதை ஏறிய நொடியில்
போதிமரத்து அடியில்
போயமர்ந்தேன்.

வான் மேல் பறந்த பறவை
என் மேல் பொழிந்த கழிவை
நான் நுகர்ந்தேன்.

கண் மேலிமை கீழிமை மூடி
உள் மனதின் உள்ளே ஓடி
நான் நகர்ந்தேன்.

புத்தனாகும் ஆசையில்
புத்திக்குள் எழுந்த ஓசையில்
புத்தன் சொன்னதையும் மறந்தேன்.

ஆசைகளற்ற மனிதர் வேண்டுமென
ஆசை கொண்ட புத்தனை போல
அநாதையாய் நானும் அந்த
அரச மரத்தடியில் இறந்தேன்.

❤️

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...