Article
December 1, 2017
கட்டுரை
SHARE

#சுயநேசமும்
#சுயபற்றுதலும்
#சுயகொண்டாட்டமும்
இல்லாத யாரும் இந்த சமுதாயத்தை மாற்றி விட முடியாது.
சுயத் தெளிவு தேவையெனில் தன்னை கொண்டாட வேண்டும். அப்போழுது தான் தற்தாழ்வு மனப்பான்மை நீங்கும். எனக்கு தெரிந்து #தற்தாழ்வு_மனப்பான்மை_இருக்கும்_இடத்தில்_தன்னம்பிக்கை_இருப்பதில்லை.
தன் நிறைகளையும் குறைகளையுமே தெரியாத, ஆராயத ஒருவர் எப்படி சமுதாய நிறை குறைகளை சுட்டி காட்டி திருத்த முடியும்.? மேலும் மனித கூட்டத்தில் மட்டுமல்ல இந்த பிரபஞ்ச பெருவெளியில் வாழும் ஒவ்வொரு உயிரும்
ஒவ்வொரு விதத்தில் தனித்தன்மையோடிருக்கிறது. இந்த புரிதலோடு எதையும் யாரையும் தாழ்த்தி பேசாத... அதாவது "#வாய்_இருக்கேனு_ஊர_வச_பாடாம_இருக்கனும்" .
அடுத்ததாக ஒவ்வொரு துக்கத்திற்கு அடுத்தும் ஒரு பேரின்பம் காத்திருக்கிறது. ஆமாம் விழுந்துட்டோமே னு அழுதுட்டே இருந்தா விழுந்தே கிடக்க வேண்டி தான்.
எழ வேண்டும். "#ஒவ்வொரு_விழுதலும்_உனக்குள்_எழுந்து_நிற்பதற்கான_வலுவிருப்பதை_எடுத்துரைக்கிறது" .
மேலும் மனிதன் பிறந்ததே சந்தோசமாய் இருக்க தான். ஆனால் அதை விடுத்து நாம் மற்ற எல்லாவற்றையும் செய்கிறோம். ஆமாம் நிறைய இடத்தில் நிறைய பேர் சொல்லி கேட்டதை தான் நானும் சொல்கிறேன். சிரிக்க தெரிந்த
மிருகம் மனிதன். மனிதன் மட்டுமே. இதை நினைவு கூறுங்கள்.#அழுது_தேம்புவதற்கும்_புலம்புவதற்குமே_உதடுகளில்லை_சிரிக்கவும்_தான். சந்தோச கணங்கள் கொண்டாடவும் தான். எப்போதும் எனக்கு இந்த கஷ்டம் இருக்கு
இந்த பிரச்சினை இருக்கிறதென்றே புலம்பல் நான் இன்னின்ன விசயங்களில் கை தேர்ந்தவன்... இன்னின்ன விசயங்கள் என்னை சந்தோசிக்க செய்தன.. என்பதை பகிருங்கள்.
கோவிலுக்குள் நுழையும் போது ஒரு வித நேர்மையையான எண்ணம் மனதில் நுழையும். ஏனென்றால் அங்கு மட்டுமே மனிதன் தன் குறைகள் நிவர்த்தியாகும் கடவுள் காப்பாற்றுவார் என்ற நேர்மறை எண்ணத்தை மனங்கொள்கிறேன்.
இதுவே கோவிலுக்கு போய் வந்த பின் மனதில் ஒரு அமைதி நிலவுவதன் காரணம்.
ஆக
#எண்ணங்களுக்கு_ஆற்றல்_உண்டு. Thoughts have energy.
#நல்லதை_எண்ணுங்கள்_நல்லதே_நடக்கும்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...