Article
November 21, 2017
கட்டுரை
SHARE

சக்களத்தி பெத்தமவ சந்தி சிரிக்க வச்சுட்டாளே பொத்தி பொத்தி வளத்த என் பொழப்புல மண்ண அள்ளி போட்டுட்டாளே. யாரு எக்கேடு கெட்டழிஞ்சா எனக்கென்னனு எங்கோடி போனளோ தெரியலையே?
பூவுக்கும் பொட்டுக்கும் ஆசை பட்டு என்னோட வெள்ள புடவைக்கு வேல வச்சிட்டாளே. சாதி தான் முக்கியம்ன்னு கட்டி வந்தவன் கால் கட்டு போட்டு கிட்டான் என் பூவையும் பொட்டையும்
கேட்காம வாங்கி கிட்டான். அடியேய் உன்ன பெத்த வயிறு ஒலையா கொதிக்குதுடி எனக்கு மட்டும் சூரியன் கருப்பாவே உதிக்குதடி. கோபுரமா கண்ட இடம் எல்லாம் கோவிலுனு கைய தூக்கி வேண்டாத
சாமிய எல்லாம் வேண்டி பெத்தவளே நல்லாத செஞ்ச எனக்கு வினையா ஆனாவளே நல்லா இரு டி நீ நல்லா இரு. என்ன கொண்டு வந்தவனுக்கு ஒன்னும் இல்லாத சாதி பெருசா போச்சு நான் கொண்டு
வந்தவளுக்கு காதல் பெருசா போச்சு நடுவால இந்த மூள கெட்ட முட்ட சிரிக்கிக்கு ஒரு நாதி இல்லாம போச்சு. இனி எதுக்கு டி இந்த மூச்சு? எனக்கு எதுக்கு இந்த மூச்சு?
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...