Back

Article

October 23, 2017

கட்டுரை

SHARE

கட்டுரை

கருத்து சுதந்திரம்.

கருத்து என்பது யாது?
நான் உன்னை குறை சொல்வதும் நீ என்னை குறை சொல்வதும் கூட கருத்து தான்.

உன் பார்வைக்கு சரியாய் படுவதை எங்கு வேண்டுமானாலும் யாரிடம் வேண்டுமானாலும் சொல்லலாம்.
ஆனால் அதை கேட்பவர் ஏற்றுக் கொள்வதும் மறுப்பதும் அது அவரவர் சொந்த விசயம்.

கருத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம் என்று கூவித் திரிகிற பல பேர் தன்மீதும் தன் தவறுகளை குறித்தும் தன் சரியை தவறாய் உருவகித்தும் வந்த கருத்துகளுக்கு செவிமடுத்திருப்பார்களானால் எண்ணிக்கை என்
கை விரல்களை விட நிச்சயம் ஒன்றிரண்டு குறைந்தோ அல்லது ஒன்றிரண்டு கூடியோ மட்டுமே இருக்கும்.

மேலும் கருத்து சொல்கிறவனை விட கேட்கிறவன் நிறைய பொறுமையோடிருத்தல் வேண்டும். விமர்சனம்.. வசவு பேசுதலும் கூட ஒரு வித கருத்துரைத்தலே. ஆமாம் அது உன்னை பற்றிய அவனுடைய தனிப்பட்ட கருத்து. இதை கேட்டு
ஆத்திரப்பட்டால் அவன் சொன்ன வசவுகளினும் தாழ்ந்தவனாகிப் போகிறாய் நீ.

அடுத்து கருத்துரைக்கிறேன் எனக்கு கருத்து சுதந்திரம் உண்டு என்று கூவிக் கொண்டு நிறைய பேர் நியாய தர்மங்களற்று தகாத சொல்லில் வார்த்தைகளால் வன்முறை செய்யாதீர்கள்.

ஒருவர் சொல்லும் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியுமானால் ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லை என்றால் அதை புறக்கணித்து விடுங்கள் அதுவும் முடியாத பட்சத்தில் நன்முறையில் உங்கள் உடன்பாடற்ற தன்மையை சொல்லலாம்.

இது தான் கருத்து சுதந்திரம்.
மற்றவர்கள் மனதை புண்படுத்தாமல்
மற்றவர் தான் செய்த தவறை உணர்ந்து அதை அவர் திருத்திக் கொள்ளும் படியோ அல்லது தன் நற்பழக்கத்தை மேலும் மெருகூட்டி கொள்ளுமாறோ சொல்வதே கருத்து.

இதற்கு மட்டுமே சுதந்திரம் வேண்டும்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...