Article
October 12, 2017
கட்டுரை
SHARE

புத்தகத்தின் புரட்டும் பக்கங்களில் எல்லாம் வேண்டாவிட்டாலும் இருக்கும் பக்க எண் போல பாசத்தோடென்னை தொடர்பவளே நான் அடையாளப்படுவதும் அர்த்தப்படுவதும் உன்னால் தான் என்
இளமையின் இருப்பை நீ தான் நினைவூட்டுகிறாய் நீயற்ற நான் தீயும் திரியும் இல்லாத விளக்கு உன்னை வாழ்த்தாத எனக்கு வாயும் நாக்கும் எதற்கு? என் ஆசையெல்லாம் நான் வாழும் காலம்
மட்டும் நீ வாழ வேண்டும் என்பதில்லை நீ வாழும் காலம் மட்டும் நான் வாழ வேண்டும் என்பதே இதிலேயே உணர்ந்திருப்பாய் நான் நீ யாகிப் போனதை தீயில் வெந்து கைப்பிடி சாம்பலாய்
கடலில் கலந்தாலும் என்னில் எப்போதும் நீயிருப்பாய் நீயில்லாத எதுவும் எனதாகாது என் அத்தனையிலும் நீ நிரம்பி இருக்கிறாய் ஆமாம் இப்போது நான் படுத்துருண்டு கொண்டிருக்கும் இந்த
கட்டிலிலும் கட்டி அணைத்திருக்கும் தலையணை யிலும் என்னை வாட்டும் எல்லா இரவுகளிலும் நீ சொல்லும் "கட்டிக்லாம்" ஆக என் தனிமைகளில் கத்தும் பல்லி சத்தத்திலும் நான்
கேட்க சலித்து கொண்டு நீ தரும் "இச் "எனும் முத்த சத்தமாக நான் உறங்கும் போது மணிக்கு ஒரு முறை என்னை விழிக்க செய்யும் நினைவுகளாக என் யாதிலும் நீ நீக்கமற நிறைந்து
இருந்து இருக்கிறாய்... இப்போது கேள் நான் உன்னை நிராகரிப்பேனா உன்னை பிரிந்தால் நான் உயிரற்ற உடல் இந்த உடல் உயிருள்ள காலம் மட்டும் தான் வாழும்... என் உயிரே உணர்வே எனக்காக
நீயழுத அந்த முதல் அழுகையை இப்போது நினைத்தாலும் கண் வாய் எச்சிலூறுகிறது சுவை ஊட்டும் தேனே என்னை மீட்டும் தென்றலே அழகே என் அமுதே அள்ளக் குறையாமல் அன்பு செய்யும் அட்சய
மே....... #யார்_நீ? #எங்கே_இருக்கிறாய்_நீ?
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...