Back
Article
September 29, 2017
கட்டுரை
SHARE

நான் நரசமாய் எழுதுவதாக
நிறைய பேர்
நிறைய தடவை
சொல்லியதுண்டு...
சொல்வதுமுண்டு.
நிர்வாணமாய் இருக்கும் எதையும்
ஒன்று ரசிப்போம்
அல்லது ச்சீ என
அருவருப்போம்.
அப்படி தான்
என் எழுத்தும்.
நான் கவிதைக்கு
அணி புனைந்து
அழகு பார்த்தாலும்
ஆடை புனைவதில்லை.
மூடிய ஒன்றை தான்
திறக்க முயற்சிப்போம்.
திறந்தே இருந்தால்?
நம் வீட்டு பலகாரத்தை விட
பக்கத்து வீட்டு பலகாரம்
படுருசியாய் இருக்கும்.
மனித மனமும் உடலும்
மறைக்க படுவதையும்
மறுக்க படுவதையுமே
அடைய ஆசை கொள்ளும்.
எட்டாத ஒன்றில் தான்
எளிதல் கிட்டாத
ஏதோ ஒன்று உள்ளதென உணர்கிறார்கள் எல்லோரும்.
அதனால் தான்
அவர் அடைய (புரிய)
ஆசைகொள்ளாத முன்னமே
அம்மணமாக்கி விடுகிறேன்
என் எழுத்துகளை.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...