Back

Article

September 24, 2017

கட்டுரை

SHARE

கட்டுரை

வாழாதனவும் வாழ்ந்து பின் மாளாதனவும் மண்ணுலகில் இல்லை. ஓடாமல் தேங்கிய நீரும் வாழ்வும் நிச்சயம் அசுத்தபடும். துன்பம் தோல்வி இறக்கம் துரதிர்ஷ்டம் அழுகை இவையில்லாமல் இன்பம்
வெற்றி ஏற்றம் அதிர்ஷ்டம் சிரிப்பு இவையெல்லாம் எப்படி? சறுக்கி விழுகிறாய் என்றால் நீ ஏறிக் கொண்டிருக்கிறாய் என்று அர்த்தம். துன்பமுறுகிறாய் என்றால் அதுவரையிலும்
அதற்கடுத்தும் இன்ப பட்டிருப்பாய் என்று அர்த்தம். முன் என்று இருந்தால் பின் ஒன்று இருக்கும். தோல்வி இல்லாமல் வெற்றி இல்லை. முரண்களை களைந்தால் வாழ்வது களைப்பாகி விடும்.
ஜெயிப்பதும் தோற்பதும் அழுவதும் சிரிப்பதும் விழுவதும் எழுவதும் ஏன் வாழ்வதும் வாழ்ந்து பின் சாவதும் கூட கலை. அதை ரசி. ஆனால் மலைத்து நிற்காமல் நகர்ந்து கொண்ட இரு. உடல்
தளர்ந்தாலும் மலர்ந்தாலும் உள்ளத்தில் உயிர் கொள். மெல்ல மெல்ல நட. நடந்து கொண்டே ஓடு. உழை. களைத்து போ. ஓய்வுறு. மறுபடியும் எழ மறுக்காதே. எதையும் ஏற்க பழகு. பென்சீனை போல
வாழ்க்கை பல கோணங்ளை கொண்ட வட்டம். ஒன்றை தொடர்ந்து ஒன்று வரும். அனுபவம் போதிக்கும். எப்போதும் நியூட்டனை நினைவு கொள். ஒவ்வொன்றுக்கும் எதிர்வொன்றும் எதிர்க்கும் ஒன்றும்
உண்டு. இப்போது இதயத் துணிவு கொண்டிருப்பாய். துணிவுக்கடுத்து நிச்சயம் ஏதேனும் ஒரு நிமிசத்தில் துவண்டு போவாய். துணிய மறுப்பாய். இது தான் வாழ்கை. இவ்வளவு தான் வாழ்க்கை.
இரண்டு பட்டதே வாழ்க்கை. காலம் உச்சந் தலைக்கு வெள்ளை அடிக்கும் நாள் வரை செத்து சிறை போகும் நாள் வரை பல்லத்தனையும் உதிர்ந்து மீண்டும் பால்யம் எய்தி கல்லறை போகும் வரை
இப்படி தான். இரண்டுக்குள்ளே அடைபட்டு இருக்க போகிறாய். இதை விட்டு வெளிவா... புதைபடும் உடல் தானே புண்படட்டும். புதிது செய்யட்டும். சுத்தமான தங்கமும் சூடுபடாத தங்கமும்
ஒன்றுக்கும் உதவாது. கொஞ்சம் அசுத்தப்படு நிறைய அடிபடு. அவசியம் என்றால் அழுது கண்ணீர் விடு.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...