Back

Article

September 12, 2016

கட்டுரை

SHARE

கட்டுரை

புதினம்:
#தொடர்ச்சி
3)அத கேட்டதும்
ஆத்தாளும் மவளும்
மாறி மாறி பாத்துக்கிட்டாங்க.
பொன்னுத்தாயிக்கு
பொசுக்கினு எங்கிருந்து தான்
அத்தனை கோவம் வந்துச்சோ தெரில
"ஏன்? என் மூத்தமவள முடிச்சு கட்டுனது பத்துலயா.
அடே குடிகாரப்பயலே எம்மவள ஆத்துல அறுத்து கொட்டுனாலும் கொட்டுவனே ஒழிய அந்த வீட்டு மருமவளா மட்டும் அனுப்பமாட்டேன்.என் தலசம் புள்ளயத் தான் தலமுழுக வச்சிட்ட.எ வம்சத்துக்குனு இன்னும் இருக்கறது ஒன்னே
ஒன்னு அதயும் பலிகொடுத்துட்டு பரதேசியா போகச் சொல்றியா?ஒரு வயித்தல பொறக்காட்டியும் கூடப் பொறந்தவனு நெனச்சு தான்டா கட்டிக்க மாட்டேனு சொன்னவளயும் கட்டாயப் படுத்தி கட்டி வச்சேன்.ஆனா நீ,யாரோ எவளோ
பெத்த புள்ளன்ற மாதிரி இல்ல எம்மவள முடிச்சுகட்டிட்ட.எங்கப்பனுக்கு பொறந்தவன்றதால இத்தனையும் பொறுத்துகிட்டு இருந்தேன்.இனிஉன் ஒட்டு வேணாம் ஒறவும் வேணாம் ஓடிப்போடா" பேசி முடிச்சிட்டு பெரு
மூச்சு வாங்குனா பொன்னுதாயி.
உடனே பல்லு போன கெழடு ஒன்னு "இந்தாத்தா பொன்னு ஆயிரந்தாயிருந்தாலும்...."
"ஆயிரமிருந்தாலும் சரி பத்தாயிரமிருந்தாலும் சரி எம்மவள இந்த கொலகார பயனுக்கு குடுக்க முடியாது"
பேசி முடிச்சிட்டு கையில இருந்த பித்தாள சொம்ப.....

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...