Back

Article

May 1, 2016

கட்டுரை

SHARE

கட்டுரை

ஆத்தாவே
உன்னப் போல
என்ன ஆதரிக்க
ஆரிருக்கா?
காத்தலா எழுந்த உடனே
உன் கையால
முகம் கழுவி
உன் முந்தானையில்
முகம் துடைப்ப நெனவிருக்கா?
எந்த வீட்டு
விருந்துக்கு போனாலும்
எலயில வைக்கும்
பலகாரத்த
எச்சிபடாம
மகனுக்கு வேணுமுன்னு
மடி கட்டி கொண்டுவருவ
மறந்துட்டியா?
பக்கத்து ஊருக்கு எல்லாரும்
பஸ் ஏறி வேலைக்கு போன
நீ பொடி நடயா போய்
அந்த காச மிச்சம் பன்னி
பள்ளிக்கூடம் போகும் போது
என் சட்டப்பையில போட்டு விடுவ
ஞாபகமிருக்கா?
அழுகைய வருதுத்தா
வெளியூர் போய் படிச்சா சீக்கிரம்
வேல கெடைக்கு முன்னு
யாரோ சொன்னாத கேட்டு
அநாதைப் போல
வாழறத நெனச்சா.
(#பேச்சு வழக்கில் எழுதியுள்ளேன்)

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...