Article
April 24, 2016
கட்டுரை
SHARE

#பழக்கப்பட்ட_பாதையில்_புதிய_பயணம்.
இந்த வழியில்
இதற்கு முன்
எப்பொழுதோ பயணப்பட்டதாய்
எனக்கொரு ஞாபகம்
அதோ காய்கறிகளை
கூறுகட்டி கூவி கூவி
விற்கிறாரே
அந்த வளர்ச்சிக்குன்றிய
வயதான பாட்டி;
இதோ
அருகிருகில் இருக்கும்
அந்த மாரியம்மன் கோவிலும்
மசூதியும்
ஏறாத்தாழ ஒரு
ஏக்கர் அளவில்
அகலமாய் வளர்ந்து நிற்கும்
அந்த வயதான ஆலமரம்
இதோ இப்பொழுது
நம்மை கடந்து போகிறாளே
ரோஜாக்கார சிறுமி
இவர்களை எல்லாம்
இதற்கு முன்
நான் பார்த்திருக்கிறேன்
இன்னும் நம்பவில்லையா நீ
இரு,
இந்த ரோஜாக்கார சிறுமிக்காய்
நானெழுதிய
கவிதை காண்பிக்கிறேன்
இதோ
அந்த கவிதை தான்
என் குறிப்பேட்டின்
கடைசி கவிதை.
வாசிக்கிறேன் கேள்
"உன்னை பார்த்தால்
எனக்கு அழுகையும்
கவிதையும் வருகிறது
என் கண்ணீரை தாங்கும் அளவிற்கு
இந்ந காகிதத்திற்கு வலுவில்லை
அதனால் கவிதையை மட்டும் எழுதுகிறேன்
"காம்பே
பூ
விற்கிறது..!!!!!".........!!!!!!!"
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...