Back

Article

April 17, 2016

கட்டுரை

SHARE

கட்டுரை

அது ஒரு பகல் தின்னும்
பயங்கர இரவு
வானம் நிலவின
வருகையை எண்ணி
உடலெல்லாம் வெட்க
செந்தூரமிட்டுக் கொண்டிருந்து.
அகலம் அதிகமில்லாத
நெடிய பாதையில்
அடி நெஞ்சின் ஞாபகங்களை
அசைபோட்ட படியாய்
ஒரு பாதயாத்திரை.
சில்லென்று மெல்லிய
பூங்காற்றொன்று
என் மேனியை வருட
என்னோடான பேச்சு வார்த்தைக்கு முற்றுப்புள்ளி
வைத்து விட்டு
சுற்றுமுற்றுமுள்ள
சுகச்சூழல் கண்டு
சுயமிழந்து போனது மனம்.
எங்கிருந்தோ பாடும் குயிலின்
இதமான இசை
கூடிக்குழவி
ஊடலுறும் குருவிகளின்
"கீச் கீச் கீச்"எனும்
கிறக்க சங்கீதம்
ஆடி அசைந்து
காற்றோடு களவி கொள்ளும்
காட்டு மரங்களின்
என் காதெட்டும் முணகல் மொழி
இதையெல்லாம் கேட்க கேட்க
இதயமங்கை ஆட்டுவிக்கும
இரட்டை துளை நாயானக்காரி(நாசித்துளை)
செயல் மறந்து போனாள்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...